திருவூஞ்சல் (Thiruvunjal)
Ver1
Ver2
ஆக்கியோன் (Author):
புலவர்மணி
வட்டுக்கோட்டையூர், பண்டிதர் க.மயில்வாகனனார் [cite: 8, 9]
காப்பு (Kāppu)
விருத்தம் (Viruttam)
சீர்மேவு கழனிகளுங் கடலு மோங்கிச் [cite: 12]
செல்வமுயர் காரைநகர்த் தோப்புக் காட்டில் [cite: 13]
பார்மேவ அருள்சுரக்குஞ் சுப்ர மணிய [cite: 14]
பகவன்மேல் திருவூஞ்சல் இனிது பாட [cite: 15]
ஏர்மேவு நல்லன்பர் இதயக் கானில் [cite: 16]
இனிதுலவிப் பிளிறிவருங் களிறெம் முன்னோன் [cite: 17]
கார்மேவும் ஐங்கரத்தன் ஒற்றைக் கொம்பன் [cite: 18]
கணபதியின் சரணமலர் காப்பதாமே[cite: 19].
நூல் (Nūl)
- திருமலிநல் வாழ்வென்னுந் தூணின் மீதே [cite: 21]
திண்மை யெனும் வைராக்ய விட்டங்கொண்டு [cite: 22]
பொருவரிய அன்பென்னுங் கயிறு சேர்த்திப் [cite: 23]
புன்னெஞ்சைப் பலகையெனப் பண்ணி வைத்தேம் [cite: 24]
மருமலியுஞ் சோலைசெறி, தோப்புக் காட்டில் [cite: 25]
மனமுவந்து குடிபுகுந்த கடம்ப மார்பா! [cite: 25]
குருமணியே! செவ்வேளே! ஆடீரூஞ்சல் [cite: 26]
கோதையரோ டினிதமர்ந்தே ஆடீரூஞ்சல் [cite: 27]. [cite: 32] - விண்ணவர்கள் மருங்கமர்ந்து வாழ்த்தெ டுப்ப [cite: 28]
விதிமுறையின் வேதியர்கள் சாமம் பாட [cite: 28]
மண்ணவர்கள் திருவருளை வழங்கென் றேத்த [cite: 29]
மாதவர்கள் மருங்கிருந்து நிட்டை கூட [cite: 29]
நண்ணுபுகழ்க் காரைநகர்த் தோப்புக் காட்டில் [cite: 28]
நலஞ்சிறப்பக் குடிபுகுந்த திருவார் மார்பா! [cite: 29]
பண்ணமையுஞ் சுப்ரமணிய ஆடீரூஞ்சல் [cite: 30]
பணி மொழியார் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 31]. [cite: 33] - நீலநிறக் கடல்நடுவில் நிமிரும் வெய்யோன் [cite: 38]
நினையொவ்வான் புறவிருளை நீக்கி னுந்தான் [cite: 39]
கோலமயில் மிசைவந்தே அடியர் துன்பங் [cite: 40]
குமராநீ தீர்ப்பதெல்லாங் கண்டோ மைய! [cite: 41]
வேலவரே நாகமுத்து கந்தர் அன்பில் [cite: 42]
விருப்புற்றே வந்தமர்ந்தீர் தோப்புக் காட்டில் [cite: 43]
கோலமுகம் ஆறுடையீர் ஆடீரூஞ்சல் [cite: 44]
கோதையர்கள் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 45]. [cite: 34] - பணியுதவு மணிகொண்டே அழகு பண்ணி [cite: 46]
பால்நிலவின் குளிர்முத்தம் பதித்து மேலும் [cite: 47]
திணிசெம்பொன் பட்டணிந்து விளங்கும் பீடம் [cite: 47]
செழுங்கதிர்கள் ஒருகோடி சேர்ந்தால் ஒப்ப [cite: 47]
மணிமயிலூர் செவ்வேள்நீ இருத்தல் கண்டோம் [cite: 47]
மாண்புமலி காரைநகர்த் தோப்புக் காடீர் [cite: 47]
அணிகுலவு தோளுடையீர் ஆடீரூஞ்சல் [cite: 47]
அரிவையர்கள் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 47]. [cite: 60] - விஞ்சிவரு காதலொடும் உயிர்கள் தம்மை [cite: 48]
வியன்கருணைத் தங்கரத்தால் ஆட்டி வைப்பீர் [cite: 48]
தஞ்சமென நுமையடைந்தோம் சுப்ர மணிய! [cite: 48]
தமிழ்க் குருவே! தனித்துணையே தண்டபாணீ! [cite: 48]
வெஞ்சமர்செய் அவுணர்க்கும் கருணை செய்தீர் [cite: 49]
வித்தகரே தற்பரரே ஆடீரூஞ்சல் [cite: 49]
கஞ்சமலர்ப் பொய்கைசெறி தோப்புக் காடீர் [cite: 49]
காரணரே அழகியரோ டாடீரூஞ்சல் [cite: 49]. [cite: 61] - அவுணர்கள் புன்செயலால் அலந்தார் தேவர் [cite: 50]
அவர்துயரந் தீர்த்தனைநீ முன்ப முன்நாள் [cite: 50]
பலவினையால் மிடிச்சேற்றில் உழந்தோம் கந்தா [cite: 50]
பன்னிருகை படைத்துடையாய் விரைந்தே ஆள்வாய் [cite: 51]
சிவநெறிசேர் நல்லோர் வாழ் தோப்புக் காட்டில் [cite: 52]
சேர்ந்தமர்ந்து வாழ்வருள்வீர் ஆடீரூஞ்சல் [cite: 52]
தவமுதல்வா வேடர்கள்கோன் பரவுஞ் செல்வா [cite: 52]
தையலர்கள் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 52]. [cite: 62] - மின்னாரும் வைரமணி முடிகள் ஆட [cite: 53]
விளங்குமுத்த நிரையெல்லாம் மிடைந்தே யாடப் [cite: 54]
பொன்னாருங் குண்டலங்கள் பொலிவோ டாடப் [cite: 55]
புயத்திலணி வலயங்கள் பொம்மென் றாட [cite: 55]
கொன்னாருங் கழலொலிப்பக் கோழி ஓங்கிக் [cite: 56]
குலவுகொடி எழுந்தாடத் தோப்புக் காடாள் [cite: 56]
மன்னவரே! நெடுவேளே! ஆடீரூஞ்சல் [cite: 57]
மங்கைமார் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 58]. [cite: 63] - மணிமயில்மேல் நடமிடுவீர் ஆடீரூஞ்சல் [cite: 68]
மாண்புடையார் நெஞ்சுறைவீர் ஆடீரூஞ்சல் [cite: 69]
அணிகுலவு தனிவேலீர் ஆடீரூஞ்சல் [cite: 70]
ஆறுபடை வீடுடையீர் அடீரூஞ்சல் [cite: 71]
பணியினங்கள் விளக்கேந்தும் தோப்புக் காடாள் [cite: 72]
பண்ணவரே! அறுமுகரே! ஆடீரூஞ்சல் [cite: 72]
பிணிதொடரா வகையருள்வீர் ஆடீரூஞ்சல் [cite: 73]
பெண்கொடியார் இருவரொடும் ஆடீரூஞ்சல் [cite: 74]. [cite: 64] - உருகிநினைந் தெழுமடியார் நெஞ்சிருப்பீர் [cite: 75]
உத்தமர்கள் செய்கையிலே கலந்திருப்பீர் [cite: 76]
பருகுதமிழ்ப் பாடலெலாம் படிந்து நிற்பீர் [cite: 77]
பயன்குலவு மலைகடொறும் ஆடல் கொண்டீர் [cite: 78]
அருகுதொறும் கலம்புகுந்தே பண்டம் வீச [cite: 79]
அருவளஞ்சேர் தோப்புக்கா டிடமாய்க் கொண்டீர் [cite: 80]
மருவுதிரு வேற்படையீர் ஆடீரூஞ்சல் [cite: 81]
மயில்நிகர்மென் சாயலரோ டாடீரூஞ்சல் [cite: 82]. [cite: 89]
வாழி (Vāḻi – Benediction)
துங்கமலி சிவம்வாழி தமிழும் வாழி [cite: 84]
தொன்மையவாம் மறைவாழி மழையும் வாழி [cite: 85]
பங்கமிலா அறம்வளர்க்கும் முனைவோர் வாழி [cite: 86]
படியாளும் தலைவரறம் பயின்று வாழி [cite: 86]
பொங்குமருட் குமரன்வாழ் தோப்புக் காட்டில் [cite: 86]
புகுந்துபணிந் திடுமன்பர் நாளும் வாழி [cite: 86]
எங்குமுள உயிரினங்கள் வாழி வாழி [cite: 87]
இசைமிகு பரிபாலனசபை இனிது வாழி [cite: 88]
முற்றும் [cite: 88]. [cite: 90, 91]
